சில பாடல்கள் முதல் தடவை கேட்ட உடனேயே தொண்டைக்குள் ஏதோ ஒரு அடைப்பு ஏற்பட்டு, இதயத்தில் ஏதோ பாரம் ஒன்று உருவாகி, கண்கள் எம்மை அறியாமலேயே மூடி, தலை இசைக்கேற்றபடி தலையாட்டி மனதுக்குள் அப்படியே ஒட்டிக் கொண்டு விடும்.
அதற்குப் பிறகு அப்பாடலை எத்தனை தடவை கேட்டாலும் ஏதோ ஒரு புதுமை இருப்பது போலவே இருக்கும். கூடுதலாக இன்றைய இளைஞர்கள் கூட்டத்தில் அப்படி ஒட்டிக் கொண்ட பாடல்களில் பல யுவனின் பாடல்களாகவே இருந்திருக்கின்றன.
முதன்முறையாக யுவனிற்குப் பிறகு அனிருத்தின் சில பாடல்கள் அப்படியான ரகங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றன.
டேவிட் படத்தில் "கனவே கனவே"...