சொல்லதெல்லாம் உண்மை என்பார் - தான்
செய்வதெல்லாம் நன்மை என்பார்
பெயர் புகழெல்லாம் எனக்கு
பிடிக்காத விடயமென்பார்
செயற்கரிய செயல்கள் செய்வார்
சாட்டையாலே எமை அறைவார்
தழும்புடன் ஓடி வந்து வலியுடன்
நாம் நிற்கையிலே
ஐயையோ என்னாச்சு என்று
அழகாய் மெல்ல நடிப்பார்
குமட்டுக்குள்ளே சிரிப்பார்
கழுத்திலே கத்தி வைப்பார்
வஞ்சனைகள் பல செய்வார்
வாயை மூடித்தான் இருப்பார்
மனதினிலே நஞ்சை வைத்து
நீ செய்தது எல்லாம் தவறு என்பார்
இடம் பொருள் ஏவலின்றி
வார்த்தைகளை உமிந்து வைப்பார்
நா தசை நரம்பின்றி
எண்ணங்களை விதைப்பார்
கடைசியிலே கெட்டவன் நீ
சேராதே என்றுரைப்பார்
வார்த்தைகள் பிழை என்றால்
வாழ்க்கையே பிழை தானே
எண்ணங்கள் பிழை என்றால்
எல்லாமே பிழைதானே
-Bavan
/** மனதினிலே நஞ்சை வைத்து
நீ செய்தது எல்லாம் தவறு என்பார்
இடம் பொருள் ஏவலின்றி
வார்த்தைகளை உமிந்து வைப்பார்
நா தசை நரம்பின்றி
எண்ணங்களை விதைப்பார்
கடைசியிலே கெட்டவன் நீ
சேராதே என்றுரைப்பார் ***/
spot on lines.