யாருமே இல்லாத
நட்ட நடு இரவு
விழி மூடிய எனக்குள்ளே
விழித்துக்கொண்ட கனவு
பாழடைந்த வீட்டுக்குள்
பாதி நிலா தெரியும்
இருட்டுக்குள்ளே விழிகளெல்லாம்
விரைந்து கொண்டு விரியும்
மின் அணுக்களின் ஓட்டத்தின்
காற்தடங்கள் புரியும்
காதுகள் தன் கூர்மையிலே
வைரம் கூட அரியும்
இல்லாத உனைத் தேடி - அவள்
கண்கள் அலை பாயும்
கடலோர நுரைகளிலே என்
காதல் மனம் ஊறும்
இதழோர வியர்வையும்
அவள் நாவினிலே சாகும்
அதரத்தில் வாய் மோதி அதன்
உயிர் மீட்பேன் நானும்
அன்புள்ள பேயே - நீ
உயிரோடு உள்ளாயா
ஐயையோ மறந்து விட்டேன்
செத்தால் தான் பேயாமே
ஆவியென்ன பேயென்ன
கொள்ளிவாய்ப் பிசாசென்ன
காதலி என் இடக்கரத்தை
இழுத்து அணைக்கையிலே
வழிதவறிக் கூட நீ
என் வலது பக்கம் வந்திடாதே
உன்னை விடக் கொடுரமாம்
என் வலதுகையின் வயிற்றெரிச்சல்
இலை குளித்த பனி நீரும்
என் மீது வீழ்ந்தாலே
தலை தெறிக்க ஓடுவது
நானாகத் தான் இருக்கும்
அவளுக்கு பேய் பயமாம் - எனை
இறுக்கிக் கட்டிக்கொண்டாள்
எனக்கு நாய் பயம் தான் என்று
நானும் ஒட்டிக் கொண்டேன்
கட்டிப்பிடி வைத்தியத்தை
கண்டு பிடித்த கமல் ஐயா
சாமியே இல்லா உமக்கு எத்தனை
கோவில் கட்டினாலும் தகும் ஐயா
அன்புள்ள பேயே நீ
அவளை மட்டும் பயமுறுத்து
காதலி முன்னிலையில்
வீரனாய் எனை நிலைநிறுத்து
அவள் முத்ததின் மோட்சத்தில்
மூச்சு முட்டி போவேனா - இல்லை
உன் சத்ததிலே கோரத்தில்
செத்துக் கித்து வீழ்வேனா
-Bavan
உன் கவிதையின் வரிகளில்
மெய் மறந்து போனேனே
காதலியையும் பேயாய் பார்க்கும் நீ
பேயோடு காதலி பார்த்த போது :p