நாம்
வாகனம் கடக்கும்
பாதையில் நின்று
பேசிக் கொண்டிருக்கிறோம்
எம்மைக் கடக்கும் போதும்
அசையாமல் பேசிக்
கொண்டிருக்கிறோம்
பயந்தடித்து எழுந்து
படபடத்து துடித்து
குதித்தெழுந்து ஓடி
உயிர் தப்பிய நாய்
ஓரமாகச் சென்று
படுக்கிறது
யாருமிங்கே அடிமை இல்லை
சாதி மத பேதமில்லை
உயர்வு தாழ்வு ஏதுமில்லை
சமத்துவமே எங்கள் கொள்கை
புள்ளிகளை நிறைத்துக் கொள்ள
ஏட்டில் மட்டும் எழுதினீரோ?
பட்டங்களை பதக்கங்களாய்
வாரி வாரி இறைத்து விட்டு - தம்
கடுகளவு கட்டங்களுள்
வாழ்கிறது ஒரு கூட்டம்
உக்காந்த இடத்திலேயே
திண்டு திண்டு வண்டி வைக்க
அதிகாலை வண்டியோடு
ஓடிப்போய் நொண்டி நிக்க
எதுக்கு இந்த நாய்ப் பிழைப்பு
என்றுதான் எழுத வந்தேன்
வண்டி குறைக்க எந்த நாயும்
ஓடியதாய் தகவலில்லை
மன்னிக்க நாய்க்குலமே
ஏதோ ஒரு பழக்கத்தில்
வாய் தவறிச் சொல்லிவிட்டேன்!
ஐஞ்சு கிலோ அரிசி மூட்டை
என்ட அம்மா தூக்கி வந்தால்
அம்மாண கடுப்பாகும் என்று சொன்ன வாய் இன்று
யாரோ ஒரு அம்மாதானே
கசக்கிப் பிழிஞ்சிடலாம்
கொஞ்ச சம்பளத்தில்
கோடி வேலை வாங்கிடலாம்
தூரமென்ன பாரமென்ன
எல்லாம் கிடையாது
பேசாமல் தூக்கிறியா? - என
துப்பித் தொலைக்கிறது
படிச்சதெல்லாம் என்னமோ
பயங்கர பி.எஃச்.டியாம்
ஒரு காதல் தோல்வி உண்டா
வேலை தேடி அலைந்ததுண்டா
பட்டினியை சுவைத்ததுண்டா
குடிகாரன் பக்கம் வர
கூட தூரம் போனதுண்டா
சகிப்புத்தன்மை மன அழுத்தம்
விரக்தி கவலை வேதனையை
புத்தகம் தாண்டி வேறெங்கும் வாழ்க்கையிலே கற்றதுண்டா
அனுபவ அறிவு என்றால்
அந்தப் புத்தகம் என்ன விலை
என்று கேட்பவனை
ஏசி என்ன செய்ய?
அவன் படிச்சதெல்லாம்
பயங்கரப் பி.ஃஎச்.டியாம்
மனிதாபிமானம் எல்லாம்
அவனுக்கு என்ன கூந்தலுக்கு?
-Bavananthan