Related Posts with Thumbnails

உல்லாகி உல்லாகி...

பதிவிட்டவர் Bavan Sunday, April 4, 2010 15 பின்னூட்டங்கள்


தயவு செய்து இந்தப்பதிவைப்படிக்காதவர்கள் படித்துவிட்டு வரவும், சத்தியமா இந்தப்பதிவுக்கு எதிர்ப்பதிவல்ல


தமிழ்ப்படத்தின் ஓ.. மகசீயா பாடல் - இந்தப்பாடலை இதுவரை எத்தனை தடவை கேட்டிருப்பேன்? ஹீஹீ அதையெல்லாம் எண்ணிகிட்டிருக்க முடியுமா..:p அப்படியே கண்ணை முடிக்கொண்டு ஏன் திறந்துகொண்டு கேட்கும் போதுகூட என்னை சிரிப்புலகுக்கு கூட்டிக்கொண்டு போய் காமடி மன்னர்களின் மத்தியில் நிற்க வைத்தது போல ஒரு உணர்வு. மீண்டும் மீண்டும் கக்கபிக்கே கக்கபிக்கெ என்று சிரிக்கத்தூண்டும் பாடல். இந்தப்பாடலைக் கேட்டும்போது அடிவயித்திலிருந்து ஒரு சிரிப்புபெடி அப்படியே மேலே ஏறி கபாலம்வரை சென்று அங்கிருக்கும் முடியை கம்பிபோல எழுப்பிவிட்ட பின்னர், வாய்பழியாக வெடித்துப்பீறீ கலகலவென சிரிப்பு கொட்டுகிறது.  


ஸ்வேதாவின் குரலில் சலனமில்லாமல் ஆரம்பித்து அப்படியே கீபோர்ட் இசை மற்றும் ஹரிஹரன் FEEL பண்ணிப்பாடும் குரல் ஆகியன அப்படியே ஒரு மொக்கையர் உலகத்துக்குள் இழுத்துப்போட்டுவிடுகிறது. பாடல் முழுவதும் உறுத்தாமல் வந்துபோகும் அர்த்தமுள்ள வரிகள் பாடலின் சிறப்பம்சம்.  


பாடல் படமாக்கப்பட்ட விதம்தான் இந்தப்பாடலின் ஒட்டுமொத்த அர்த்தத்தையும் வெளிப்படுத்தி மப்பும் மந்தாரமுமான காலைவேளையில் ஆரம்பிக்கும் பாட்டு கூவம் ஆற்றங்கரையோரமாக கதாநாயகியை நாயகன் விட்டு துரத்துவதும் அதன்பின்னர் தனது மந்திரஜாலத்துக்குள் நாயகியைக்கட்டுப்படுத்திய நாயகன் நாயகியை பாடும்படி செய்யும் சைகையை உணர்ந்து அவர் பாட ஆரம்பிக்கும் காட்சி அற்புதம்.  


ஓ.. மகசீயா.. ஓ.. மகசீயா.. 
நாக்கமுக்க நாக்கா ஓ.. சக்கலாக்கா... 
ஓரண்டக்கா..  


மகசீயா என்று அக்கறையுடன் காலையில் எழுந்ததும் நாக்கு மூக்கு கழுவினியா? பல்லுவிளக்கி ஓரமாச்சப்பித்துப்பினியா என்று காதலன் காதலி ஆகியோர் அக்கறையுடன் விசாரிப்பத்துக்கொள்வது போல ஆரம்பிக்கும் வரிகள் நாமும் பல்லுவிளக்கினோமா என்று ஒருதடவை சிந்திக்கவைக்கிறது. 


ஓ..லாகி ஓ..லாகி 
ஆயக யகியகி மெஹோ மெஹோ 
டைலாமோ டைலாமோ 
ரஹதுல்ல சோனாலி..ஓ..  


லாகி என்று காதலனை அழைத்து ஆயா வந்து யகீஈ.. யகீஈ.. என்று ஈ என்ன பல்லை விளக்கிவிட்டார் என்று குறிப்பிடுவது முதல் ஆமாம் ரஹத்துல்ல சோனாலி என்ற ஆயா தைலம் கூடத்தடவி விட்டார் என்று குறிப்பிடுவது, தைலத்தின் வாசனையை அப்படியே மூக்கின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.


சாம்ப சம்பாலே..
ஓ சூசே சாயோ சாயோ..
ஹசிலி பிசிலி..
இல்லாகி..
யப்பா ஜிப்பா



சாம்பலாலே நீ பல்லு விளக்கினியா? இல்லை காலையிலெழுந்து சாயா(தேனீர்) குடிச்சியா? கசக்கிப்பிழிஞ்சு உன் ஜிப்பா துவைச்சியா என காதலி கேட்க அதற்கு காதலன் பதில் சொல்லும் காட்சி நாற்றமடிக்கும் துவைக்காத எமது சட்டையை நினைவில் கொண்டுவந்து நிறுத்துகிறது.


டைலமொ டைலமொ..பல்லெலக்க..
நாக்க முக்க நாக்க..
ஓ ஷகலக்க..
ஓ ரண்டக்க



பாடலை முதன்முறை கேட்ட போதே என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை, தைலம் தன் பல்லில் பட்டுவிட்டதாக காதலியிடம் காதலன் உருகித் தெரிவிக்கும் காட்சி எமது பல்லையும் ஒரு தடவை கூசச்செய்கிறது. அதன் பின்னர் காதலி கவலைப்படாதே நாக்கில மூக்கில படலத்தானே என்று சமாதானப்படுத்துவது, அவர்களின் அன்பை எரிச்சலின்றிக் காட்டுகிறது.


ஏ சல சாலா..
இஸ்க்கு பரா(ட்)ரா..
ஒசாக முராய..
பூம் பூம் ஜக்காக்கா..
முக்கால்லா..
மய்யா மய்யா



இந்தவரிகளை எவ்வாறு விபரிப்பது? உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறது, உங்களுக்கு வைக்கப்படட் பராட்டாவையும் சால்னாவையும் பூனை தின்றது போன்ற உணர்வைத் ஏற்படுத்துகிறதா? வரிகளில் சொல்லப்படும் பராட்டாவை பூனை திருடிவிட்டது என்று பசியுடன் காதலன் சொல்லும் இந்த வரிகளில் வரும் பராட்டாவை வாயால் சாப்பிடவே முடியாது.


கலாட்டாவுடன் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்...


நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. நான் தான் முதலாவது....

  1. தெய்வமே................

    நீங்க எங்கயோ போய்ற்றீங்கள்.....

    கலக்கல் பவன்.....

    இது மரண மொக்கை...
    பின்னிப் பெடெலெடுத்துவிட்டீர்கள்....

    /ஹீஹீ அதையெல்லாம் எண்ணிகிட்டிருக்க முடியுமா..:p //
    இதில் தொடங்கி இறுதிவரிவரை சும்மா கலக்கியெடுத்திருக்கிறீர்கள்.....

    வாழ்த்துக்கள்....

  1. இந்த இடத்தில சுப்பர் தோற்றுவிட்டார்... ஹி.. ஹி....

  1. இங்கு பின்னூட்டமிடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்....

    ஒற்றை வார்த்தைகளில் பின்னூட்டமூட்டி பதிவை அசிங்கப்படுத்தாமல் 4,5 வரிகளில் பின்னூட்டவும்.... :P

  1. தலைவர் எதிர்பதிவு இல்லை என்று சொல்லி கொண்டே ஒரு மரண மொக்கையா???

    இனிமேல் யாரும் பாடலை ரசித்து பதிவு போடமாட்டார்கள் என்று நம்புகிறேன்!!!

    கோபி அண்ணா சொன்னது போல,
    /ஹீஹீ அதையெல்லாம் எண்ணிகிட்டிருக்க முடியுமா..:p //
    இதில் தொடங்கி இறுதிவரிவரை சும்மா கலக்கியெடுத்திருக்கிறீர்கள்....

    கலக்கவும்!!!!!!!!!!!!!

  1. Subankan Says:

    அடங்கொக்கமக்கா அடங்கமாட்டியா நீயி

    எப்பிடியோ ஐ ஆம் ஜஸ்டில எஸ்கேப்பு

  1. தமிழ் பட இயக்குனருக்கு இந்த லிங்கை ஒருக்கா அனுப்பிவிடு ராசா, அந்தாள் சந்தோசப்படும்.

    மொக்கை பாடலுக்கு விளக்கம் தந்த புலவன் பவன் வாழ்க.

    //ஒற்றை வார்த்தைகளில் பின்னூட்டமூட்டி பதிவை அசிங்கப்படுத்தாமல் 4,5 வரிகளில் பின்னூட்டவும்.... :P//

    ஆமா பிச்சு புடுவன் பிச்சு

  1. தமிழிலில் சங்க இலக்கியங்களில் உள்ள பாடல் வரிகளையே பொருள் பிரித்து விளக்கவுரை கூறும் தமிழ் அறிஞர்கள் கூடத் தோற்றுவிடுமளவிற்குப் பாடலிற்கான விமர்சனமும், விளக்கமும் அருமையாக உள்ளது.


    இப்படித் தான் யாரோ ஒருவர் கவிஞர் வைரமுத்துவிடம் ‘’முக்காலா முக்கா பெல்லா.... என்ற வார்த்தைக்குப் பொருள் கேட்க... கவிஞர் கூறினாராம்.. முக்காலா என்பது முற்றுப் பெறாமல்/ முழுமையடையாமல் இடையில் நின்று தத்தளிக்கும் காதலினைக் குறிப்பிடும் என்று.


    நம்ம கவிஞர்கள் என்ன தான் பொருள் விளங்காத பாடல்களைப் போட்டாலும் பவன் போன்ற அறிவு ஜீவிகள் இலகுவாகப் பொருள் பிரித்துக் கூறி விடுவதால் சினிமாத் திரையுலகத்தினர் இனிப் பயப்படமால் இவ்வாறான பாடல் வரிகளை எழுதலாம் என்பது எனது கருத்து.

  1. தற்போது கிடைத்த செய்தி: பவனின் பாடல் விமர்சனத் திறமை,பொருள் பிரித்து, விளக்கவுரை வழங்கும் தன்மை காரணமாக ஜனாதிபதி மஹிந்த அவர்கள் தனது அரச சபையில் அழிந்து போன பல தமிழிலக்கியங்களைப் புதை குழியிலிருந்து மீட்டுப் பொருள் விளக்கமளிக்கும் அரச சபைப் புலவராக நியமிக்கவிருப்பதாக எமது பாராளுமன்றச் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

  1. ஐயா சாமி என்னால தாங்க முடியல.

    சுபாங்கன் மேல கோவமிருந்தா நேரடியா சொல்ல வேண்டியதுதானே. அதுக்கு இப்படியா மொக்குவாங்க.

    சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

  1. இவ்வளவு அழகான கருத்துக்கள் நீ சொல்லலையின்னா தெரியாமலே போயிருக்கும் பவன். விளக்கம் கேட்டு பாட்டு கேக்கும்போது புல்லரிக்குது.:))

  1. ஆகா ஆகா.. இன்னொரு தமிழ்ப்படம் இலங்கையிலிருந்து????

    இந்தப் பதிவு பார்த்த பிறகு சுப்பர்,குப்பர்கள் எல்லாரும் (யாரையும் நக்கல் பண்ணலீங்கோ..) அழகு தமிழில் மட்டும் தான் பாட்டு எழுதுவாங்கன்னு கலைஞர் ஐய தலையில் அடிச்சு சத்தியம் பண்ணிட்டாங்களாம்

    அனா ஜிப்பா,சால்னா? இதெல்லாம் எப்போ இங்கே நாடு கடத்தினாங்க?

  1. Bavan Says:

    கன்கொன்,

    தாங்ஸ் தலிவா...:p

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும் அண்ணே..;)

    ***
    இலங்கன்,

    //இந்த இடத்தில சுப்பர் தோற்றுவிட்டார்... ஹி.. ஹி....//

    சுப்பர் செம கொலைவெறியுடன் என்னைத் தேடுகிறாராம், நான் முகத்தில் ஒரு பெரிய மருவை ஒட்டி மாறுவேடம் போட்டுத் தப்பித்துக்கொண்டிருக்கிறேன்..:p

    நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)


    ***

    அனுதினன்,

    நன்றி வருகைக்கம் கருத்துக்கும்...;)

    ***

    சுபா அண்ணா,

    //அடங்கொக்கமக்கா அடங்கமாட்டியா நீயி//

    அணைகட்டித் தடுக்க நான் கால்வாயில்ல காட்டாறு...:P

    நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)


    ***

    AKAM,

    //தமிழ் பட இயக்குனருக்கு இந்த லிங்கை ஒருக்கா அனுப்பிவிடு ராசா, அந்தாள் சந்தோசப்படும். //

    ஹீஹீ...

    //மொக்கை பாடலுக்கு விளக்கம் தந்த புலவன் பவன் வாழ்க. //

    இதுக்கு விளக்கம் சொன்ன பிறகும் மொக்கைப்பாடல் என்று சொன்னதுக்கு என் கண்டனங்கள்..:p

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. Bavan Says:

    கமல் அண்ணே,

    //பவன் போன்ற அறிவு ஜீவிகள்//

    அட அட அட...நீங்க தெய்வம் அண்ணே தெய்வம்..:p

    //ஜனாதிபதி மஹிந்த அவர்கள் தனது அரச சபையில் அழிந்து போன பல தமிழிலக்கியங்களைப் புதை குழியிலிருந்து மீட்டுப் பொருள் விளக்கமளிக்கும் அரச சபைப் புலவராக நியமிக்கவிருப்பதாக எமது பாராளுமன்றச் செய்தியாளர் தெரிவிக்கிறார்//

    அவ்வ்வ்வ்.... தேர்தல் காலம் வேற நீங்க வேற வம்பில மாட்டிவிடப்பாக்கிறீங்களே..

    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...


    ***

    யோ அண்ணே,

    ஹீஹீ நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    வானம்பாடிகள் சார்,

    //இவ்வளவு அழகான கருத்துக்கள் நீ சொல்லலையின்னா தெரியாமலே போயிருக்கும் பவன். விளக்கம் கேட்டு பாட்டு கேக்கும்போது புல்லரிக்குது.:))//

    ஹீஹீ... புல்லரிக்குதா வயிறு வலிக்குதா..:p

    நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்...;)


    ***

    talaivan,

    இணைத்துக்கொள்கிறேன்...;)

    வருகைக்கு நன்றி..;)

    ***

    LOSHAN அண்ணா,

    //இந்தப் பதிவு பார்த்த பிறகு சுப்பர்,குப்பர்கள் எல்லாரும் (யாரையும் நக்கல் பண்ணலீங்கோ..) அழகு தமிழில் மட்டும் தான் பாட்டு எழுதுவாங்கன்னு கலைஞர் ஐய தலையில் அடிச்சு சத்தியம் பண்ணிட்டாங்களாம் ///

    நீங்க யாரையும் நக்கல் பண்ணலத்தானே அப்ப சரி..:p

    //அனா ஜிப்பா,சால்னா? இதெல்லாம் எப்போ இங்கே நாடு கடத்தினாங்க?//

    இந்தியாவில் எழுதினபாட்டுங்கிறதால ஜிப்பா சால்னா வந்திருக்குமோ..:p

    ஹீஹீ... நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)


    ***

    மற்றது உல்லாகி உல்லாகி என்றால் உல்டா இல்லை உல்டா இல்லை என்றுபொருள் அதுதான் தலைப்பில் அப்படி உண்மையப் போட்டன்..:P

  1. பாடலை எழுதிய கவிஞர் என்று ஒருவர் இருப்பாரல்லோ??அவர் அந்த ஐ பாத்தா தனக்கு கிடைச்சிருக்கும் பட வாய்ப்புகளை உங்களுக்கு தந்தாலும் ஆச்சரியமில்லை!! கலக்குறீங்க

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்