அடி உதை அறுவடை செய் 
அனைவர்க்கும் அறிமுகம் செய் 
மிருகத்தை விதைச்சலும் செய் 
பயிற்சியில் பலரையும் கொய்! 
முதலையின் வாய் தொட முன் 
அதை கண்களால் கழுவியே வை
காரியம் முடியும் வரை - அதன்
கல் மனம் கரைந்திடச் செய் 
தலைமைகள் தவறிழைத்தால் 
தாடைகள் தகருமென்றால் 
குருத்துகள் வதை புரிந்தால்  - இரு
விரல்களே சிதைக்குமன்றோ! 
ஆலமாய் வளர்ந்திட்ட வேர் - இன்று 
அழித்திட முளை விடுமே! 
ஆழமாய் புதைத்து விட்டாய் - இனி
நீ விதைத்தை அறுவடை செய்! 
-Bavananthan 
 
அருமையான பதிவு
சிந்திக்கச் சுவையான வரிகள்