Before Reading This Post |
கேப்பைமாரித்தனம்
முன்னொரு காலத்தில் மாரி என்று ஒருவன் இருந்தான், அவன் இருக்கும் ஊரில் என்ன பிரச்சினை வந்தாலும் அதற்கு அவன்தான் காரணமாக இருக்கும். சின்னப் பிரச்சியையும் ஊதிப்பெரிதாக்கும் வல்லமை படைத்தவன். ஆனால் பிரச்சினைக்குக் காரணம் மாரிதான் என்று கண்டுபிடிக்கும் போது அவன் அந்த இடத்தில் இருக்க மாட்டான். சின்ன இடைவெளியில் எப்படியாவது தப்பி விடுவான்.
அதற்குப் பிறகு அவனைப்போல யாராவது பிரச்சினையை உண்டாக்கிவிட்டு இடையில் தப்பி ஓடிவிட்டார்கள் என்றால் அதை அந்த ஊர் மக்கள் Gapல்மா(றி)ரித்தனம் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதுவே மருகி காலப்போகில் கேப்(பை)மாரித்தனம் என்று ஆகிவிட்டது.
மொள்ளைமாரித்தனம்
மேற்குறிப்பிட்ட அதே மாரி தனது சொந்த ஊரில் வழக்கம்போல பிரச்சினையை ஏற்படுத்திவிட்டு தப்பியோடி பக்கத்து ஊருக்குள் தஞ்சம் புகுந்தான். அங்கேயும் தனது தப்பியோடும் விளையாட்டுக்களை ஆரம்பித்த மாரி காலப்போக்கில் அங்கேயும் பிரபலமாகிவிட்டான். அங்கும் இதே போல பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டு புலி போல் பதுங்கிப் பதுங்கி யார் கண்ணிலும் சிக்காமல் தப்பி விடுவான்.
எனவே அந்த ஊர் மக்களும்அதற்குப் பிறகு நமது மாரியைப் போல பிரச்சினை ஏற்படுத்திவிட்டு மெதுவாகத் தப்புபவர்களுக்கு மெல்ல(மாறி)மாரித்தனம் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதுவே காலப்போக்கில் மருகி மொள்ளமாரித்தனம் என்று அழைக்கப்படுகிறது.
After Reading This Post |
பி.கு: ஒரு பதிவு எழுதணும்னா என்ன கேப்மாரித்தம் OR மொள்ளமாரித்தனமும் பண்ணலாம் தப்பில்ல =P
அப்போ முடிச்சவிக்கி?